திங்கள், 18 மே, 2015

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை...



முதலில் இது பகத்சிங்கின் வரலாறு அல்ல.. அந்த மாவீரனை தன் முன்மாதிரியாக கொண்ட ஒரு போராளியின் கதை..

ஆர்யாவுக்கு வைக்கப்பட்ட பாலு என்கிற பெயர் மட்டுமே ஜனநாதனை கொண்டாட போதுமானதாய் இருக்கிறது எனக்கு.. அந்த உச்சகட்ட காட்சியில் இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில், மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட்  கம்யுனிஸ்ட் கட்சி அலுவலக வாசலில் கம்பீரமாக நிற்கும் தூக்குமேடை தியாகி பாலுவின் உருவம் கண்களில் தோன்றி மறைந்தது எனக்கு மட்டும் அல்ல என நம்புகிறேன்...

தூக்கிலிடும் தொழிலாளியாக வந்து அதன் வழியை நமக்குள் கடத்திய விஜய் சேதுபதி முக்கியமான பாத்திர படைப்பு... தூக்கிலிடுபவரின் குறிப்புகளாக படித்த ஜனார்த்தனம் பிள்ளையின் வாழ்க்கை நினைவுகளை முன்னால் நிறுத்துகிறது...

மெக்காலே ஷாம் அசத்துகிறார்... அரசியலமைப்பு சட்டத்தின் நகலாக அல்ல... ஆள்வோரின் வேட்டை நாயாக நம் கண்முன் வாழும் அல்லது அப்படி வளர்க்கப்படும் மிருகங்களின் திரை முகம் இது...

குயிலி என்ற கார்த்திகா, எமலிங்க்கதின் காதலை கடந்து செல்வது மிக முக்கியமான காட்சிகள்... ராணுவ தாக்குதலுக்கு முந்தைய நாள் குயிலியும், பாலுவும் ஆடிப்பாடும் அந்த நடனம் தோழமையின் மிச்சம்.. அதை காதலென அர்த்தப்படுத்துவோர் இந்திய மாணவர் சங்கத் தோழர்களிடம் பாடம் படித்தல் நலம்.

தமிழ்தேசியம் குறித்த ஜனநாதனின் விமர்சனம் மிக முக்கியமானது... அந்த துணிச்சலுக்கு ஒரு லால் சலாம் காம்ரேட்.

இன்னும் இன்னுமாய் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் படம் குறித்து நிரம்பி கிடக்கின்றன... ஆப் கி மோடி சர்க்காரின் சென்சாரை தாண்டி இந்த சினிமா வெளிவந்தது சாதாரண முயற்சியல்ல... அதற்கு பின்னால் நிறைந்து வழிகிறது ஜனநாதன் சுமந்த வலி... அதை பாராட்டா விடினும் கொச்சை படுத்த வேணாம்...

எல்லாவற்றையும் மீறி மனதை விட்டு அகல மறுக்கிறாள் எமலிங்க்கதின் தாய்...

எப்படி இருந்தா என்ன டா... நம்ம வீட்டுக்கு வந்து குடும்ப போனா ஆகிட்டு போறா... கிரேட் அம்மா....


ரெட் சல்யுட் காம்ரேட்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக