வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஒற்றை காரணம் நீ...



அடர்ததியின் பரப்பை
அதிகமாக்கி கொண்டே
போகிறது உன் காதல்...

எனக்கானவற்றை
புரிந்து வழங்க
நீயெடுக்கும் அக்கறையில்
தன்னை தானே
புதுப்பித்து கொள்கிறது
என் காதல்...

என் வாசிப்பின் வெளி
விரிந்து பறந்ததற்கான
ஒற்றை காரணம் நீ...

பெருத்த வாசிப்பின் பலனாய்
கதைகள் எழுதவும்
துணிகிறேன்...

அந்த கதைகளில்
நீயின்றி போகலாம்....

அது கதைகளாய் எழுவதற்கு
நீயே
நீ மட்டுமே காரணம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக