திங்கள், 16 மார்ச், 2015

பிதாவே தயவு செய்து இவர்களை மன்னித்து விடாதேயும்....



மேற்கு வங்கத்தில் அந்த துயரம் நிகழ்ந்துள்ளது என்பது தான் அச்சத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

72 வயது கிறிஸ்தவ பெண் துறவி 5 மிருகங்களால் சிதைக்கப்பட்டிருக்கிறார்...

இடதுசாரிகளின் 30 ஆண்டு கால ஆட்சியில், பறந்து விரிந்து கிடந்த மதசார்பின்மையின் நிழலில் நிம்மதியாய் உறங்கி கிடந்த மாநிலத்தில் தன ஒரு நள்ளிரவில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருந்து தான் அவர்கள் இப்போது எழுகிறார்கள். அவர்கள் அங்கிருந்து எழுகிறார்கள் என்பதே  அச்சத்தை அதிகரிக்கிறது...

யார் அந்த 5 பேர்.?

5 பேருக்கும் 16 வயதிலிருந்து 25 வயதுக்குள் தான் இருக்கும் என்கிறது ஒரு பத்திரிகை செய்தி. 

பாதிக்கப்பட்டவரின் வயதும், குற்றவாளிகளின் வயதுமே குற்றத்தின் நோக்கம் பாலியல் வன்கொடுமை அல்ல என்பதை நமக்குணர்த்த போதுமானதாய் இருக்கிறது...

கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை சிதைக்க வேண்டும் என்பதும், அந்த அடையாளத்தை கொண்டிருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதும் மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

அதனால் தான் அந்த துறவியின் முதுமை கூட கண்களை மறைத்து, கிறிஸ்தவர் என்பது மட்டும் அவர்களை உறுத்தியிருக்கிறது...

இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் அவர்கள் நிறைமாத கர்ப்பிணிகளை கூட விட்டுவைக்கவில்லை என்பதை இதோடு இணைத்து பார்க்க வேண்டும்...

திமிரையும், கொழுப்பையும் உடலிலும், வன்மத்தையும், வக்கிரத்தையும் மனதிலும் பூசிக்கொண்டு திரிகிற ஒரு கூட்டம் தேசம் முழுக்க இறக்கிவிடப்பட்டுள்ளது.

அவர்களே மசூதிகள் வெறும் கட்டடம் என்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்கிறார்கள்.
மாட்டிறைச்சி தின்னாதே என்கிறார்கள்.
அரியானாவில் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்..


இன்னும் என்ன என்னமோ அவர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்...

ஆனால் மனிதத்தை காக்க வேண்டியவர்கள் கள்ள மவுனம் காத்து கொண்டு, அல்லது செயல் படுகிறவர்களையும் நோட்டை சொல்லி கொண்டு திரிகிறார்கள்...

பிதாவே தயவு செய்து இவர்களை மட்டும் மன்னித்து விடாதேயும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக